என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கல்வி சீர்வரிசை"
- சேடபாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து கல்விச்சீர் வரிசையோடு ஊர்மக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
- விழா ஏற்பாடுகளை நகர்மன்ற உறுப்பினர் ராஜசேகர் தலைமையில் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.
பல்லடம் :
பல்லடம் சேடபாளையம் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது .இங்கு 82 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியின் 73 வது ஆண்டு விழா நடைபெற்றது. பெற்றோர்கள் சார்பாக பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு தேவையான நோட்டுப் புத்தகங்கள், சேர்கள், பாத்திரங்கள், காமராஜர், அப்துல் கலாம் படங்கள், சுகாதாரப் பணி பொருட்கள் உள்ளிட்டவைகளை பள்ளி தலைமை ஆசிரியை ரெஜினா மேரி, நகர் மன்ற உறுப்பினர் ராஜசேகர் ஆகியோரிடம் பெற்றோர்கள் வழங்கினர்.
முன்னதாக சேடபாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து கல்விச்சீர் வரிசையோடு ஊர்மக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்தனர். பின்னர் பள்ளி கலையரங்கத்தில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளி குழந்தைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்றது.
இதில் பல்லடம் நகர்மன்றத் தலைவர் கவிதாமணி, தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திரகுமார், மற்றும் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சித்ராதேவி, செல்வகுமார், மகேஷ் குமார் மற்றும் ஊர் பிரமுகர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நகர்மன்ற உறுப்பினர் ராஜசேகர் தலைமையில் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்